அமைச்சர் பீரிஸை சந்தித்த கட்டார் தூதுவர்

கட்டார் அரசிற்கான தூதுவர் ஜாசிம் பின் ஜாபர் ஜே.பி. அல்-சோரூர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை கடந்த 06 ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தின் பின்னடைவை அதிகரிப்பதற்கு அரசாங்கம் இதுவரையில் எடுத்த உறுதியான நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ், தூதுவர் அல்-சொரூரிடம் விளக்கினார்.

இலங்கை – கட்டார் இருதரப்பு உறவுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்திய கட்டார் தூதுவர், இச்சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவுகளையும் உறுதியளித்தார்.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *