வடக்கின் நீலங்களின் சமர் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பம்!

11 ஆவது வடக்கின் நீலங்களின் சமர் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிகளிற்கிடையிலான குறித்த கடினப்பந்து போட்டி எதிர்வரும் 10ஆம் திகதி கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு்ம, போட்டி வீரர்கள் அறிமுக நிகழ்வும் இன்று கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில்இரு பாடசாலை முதல்வர்கள், ஆசிரியர்கள், வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இவ்வாண்டுக்கான போட்டிக்கு மொபிட்டல் நிறுவனம் அனுசரணை வழங்குகின்றது.

வடக்கு நீலங்களின் சமர் என பெயரிடப்பட்டு நடார்த்தப்பட்டு வரும் குறித்த போட்டி 10 போட்டிகள் நிறைவுபெற்று எதிர்வரும் 10ம் திகதி 11வது வடக்கின் நீலங்களின் சமராக நடைபெறவுள்ளது.

இரண்டு நாட்களைக்கொண்ட குறித்த போட்டியின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 10ம் திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 4.30 மணிவரை இடம்பெறவுள்ளது. இரண்டாம் நாள் போட்டி மறுநாள் காலை இடம்பெறும்.

இன்றைய ஊடக சந்திப்பின்போது வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், புதிய சீருடை மற்றும் புதிய வெற்றிக்கிண்ணமும் அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *