இலங்கை தொடர்பாக ரஷ்ய அரசாங்கம் தொடர்ந்தும் நட்பு ரீதியான கொள்கையை பின்பற்ற வேண்டும் – சஜித்

<!–

இலங்கை தொடர்பாக ரஷ்ய அரசாங்கம் தொடர்ந்தும் நட்பு ரீதியான கொள்கையை பின்பற்ற வேண்டும் – சஜித் – Athavan News

இலங்கை தொடர்பாக ரஷ்ய அரசாங்கம் தொடர்ந்தும் நட்பு ரீதியான கொள்கையை பின்பற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ரஷ்யா – இலங்கை நட்புறவு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவருடனான கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான நிலைமை குறித்து கவலை தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதுபோன்ற பிரச்சினைகளை இராஜதந்திர ரீதியில் தீர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *