காஞ்சன விஜேசேகரவிற்கும் மின்சார தொழிற்சங்கங்களுக்கும் இடையில் சந்திப்பு

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கும் மின்சார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (புதள்கிழமை) மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின்போது உத்தேச மின்சாரத் திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டாம் என அமைச்சர் தீர்மானித்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என தொழிற்சங்கங்கள் அமைச்சரிடம் தெரிவிக்கவுள்ளன.

நாளை சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டால் இன்று இரவு 12 மணி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் கூறுகின்றனர்.

இந்த சட்டமூலம் நாளை நிச்சயம் சமர்ப்பிக்கப்படும் என காஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் இனறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *