
அடுத்துவரும் 6 நாள்களுக்கு எரிவாயு விநியோகம் இடம்பெறும் என்று லிட்ரோ நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.
3 ஆயிரத்து 900 மெற்றிக் தொன் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பலொன்று நேற்று நாட்டை வந்தடைந்துள்ளது.
இந்த நிலையில் எஞ்சிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தி எரிவாயுவை இறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கமையவே அடுத்துவரும் 6 நாள்களுக்கு எரிவாயு விநியோகம் இடம்பெறும் என்று லிட்ரோ நிறுவனத் தலைவர் தெரிவித்தார்.