மரக்கறிகளின் விலை 50 வீதத்தால் அதிகரிப்பு!

அத்தியாவசியப் பொருள்களின் விலை சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், சந்தைகளில் மரக்கறி மற்றும் மீன்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. இதற்கமைய மரக்கறிகளின் விலைகள் சுமார் 50 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

போஞ்சி, தக்காளி, கறி மிளகாய் ஆகியவற்றின் மொத்த விற்பனை விலை ஒரு கிலோ 500 முதல் 700 ரூபாவாக அதிகரித்துள்ளன. அவற்றின் சில்லறை விலை ஆயிரம் ரூபாவைத் தாண்டியுள்ளது. அத்துடன் அடுத்துவரும் வாரத்தில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கம்பஹா-பேலியகொடை மீன் சந்தையில் ஒரு கிலோ கெலவல்லா மீன் 2 ஆயிரம் ரூபாவாகவும், ஒரு கிலோ தலபத் மீன் ஆயிரத்து 700 ரூபாவாகவும், பலயா மீன் ஒரு கிலோ ஆயிரம் ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *