பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க மீள வாய்ப்பு

2020 உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை இன்று (26) முதல் மீண்டும் வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்கும் மாணவர்கள், பல்கலைக்கழக தெரிவு அல்லது பாடநெறிகளை மாற்றுவதற்கான தேவையேற்படின் அதற்காக மீண்டும் இரு வார கால அவகாசம் வழங்கப்படும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் சில மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க முடியாமற்போயுள்ளதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *