யானை தாக்கி 4 மாத குழந்தை பலி

அக்கரைப்பற்று, ஜுன் 09

அக்கரைப்பற்று பள்ளக்காட்டு பகுதியில் காட்டு யானைத் தாக்கியதில் 4 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

புதன்கிழமை மாலை குறித்த பகுதியில் உள்ள மரம் ஒன்றின் கீழ் குழந்தையை உறங்க வைத்து விட்டு அதன் பெற்றோர் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு பிரவேசித்த காட்டுயானை குழந்தையை தாக்கியதில் குழந்தை உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அக்கரைப்பற்று ஆதர வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *