மின்சார விநியோகம் – வைத்தியசாலை சேவை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவை ஆகியன அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

1979 ஆம் ஆண்டு இலக்கம் 61 இன் கீழான அத்தியாவசிய பொது மக்கள் சேவை சட்டத்தின் இரண்டாவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பில் இதுதொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், அரசாங்க கூட்டுத்தாபனம், திணைக்களம் உள்ளூராட்சி மன்றம் அல்லது கூட்டுறவுச் சங்கங்களினால் விநியோகிக்கப்படும் மின் விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவை பொது மக்களின் வழமையான வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு அத்தியாவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வைத்திய சாலை, பராமறிப்பு நிலையம், வைத்திய நிலையம் மற்றும் ஏனைய பொதுவான நிறுவகங்களினால் நோயாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சிகிச்சை மற்றும் சேவைகள் வைத்தியசாலை சேவைகளுக்கு உட்பதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *