யானைக்கு இரையான 4 மாத குழந்தை – அக்கரைப்பற்றில் சம்பவம்!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பள்ளக்காட்டு பகுதியில் காட்டு யானைத் தாக்கியதில் 4 மாத குழந்தையொன்று உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள மரம் ஒன்றின் கீழ் நேற்று மாலை குழந்தையை உறங்க வைத்துவிட்டு குழந்தையின் பெற்றோர் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து அங்கு பிரவேசித்த காட்டுயானை குழந்தையை தாக்கியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அக்கரைப்பற்று ஆதர வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார். முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *