வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் தீ பரவல்

வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் உள்ள காணியில் இன்று காலை தீ பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த இடத்திற்கு விரைந்து சென்ற நகரசபை தீயணைப்பு பிரிவினர் ,இரண்டு மணித்தியாலய போராட்டத்தின் பின்னர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை பூவரசங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *