கொழும்பில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல் – போக்குவரத்து பாதிப்பு

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னிருந்து காலி முகத்திடல் நோக்கி எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் காரணமாக கொழும்பு கோட்டையைச் சுற்றியுள்ள பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னிருந்து காலி முகத்திடல் நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக செல்வதால் இவ்வாற போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *