இலங்கையில் மேலும் 542 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இதுவரை 520,172 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,059 ஆக அதிகரித்துள்ளது.