மீண்டும் அமைச்சராகின்றார் பவித்ரா?

மகளிர், சிறுவர் விவகார அமைச்சு பவித்ரா வன்னியாராச்சிக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் சில தினங்களுக்குள் இந்த நியமனம் வழங்கப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று ஜனாதிபதியினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள இரண்டு அமைச்சுக்களில் ஒன்று வர்த்தகர் தம்மிக்க பெரேராவிடம் கையளிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் மகளிர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கள் என்பன ஜனாதிபதியினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தம்மிக்க பெரேராவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ பதவி விலகியதை அடுத்து, குறித்த வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளதாகவும் அவருக்க புதிய அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, தம்மிக பெரேரா தனது அனைத்து நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினர் பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *