கோத்தாவை வீடு செல்ல வலியறுத்தி பொலிஸ் தலைமையகம் மக்களின் முற்றுகைக்குள்!

மக்கள் தன்னெழுச்சி போராட்டமான கோத்தா கோ கம மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என தெரிவித்து பொலிஸ் தலைமையகம் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டது.

கடந்த மாதம் 9 ஆம் திகதி கோத்தா கோ கம மற்றும் மைனா கோ கம அறவழி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது.

போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்கள் நேற்று கொழும்பு கோட்டையில் இருந்து பொலிஸ் தலைமையகம் வரை பேரணி முன்னெடுத்தனர். பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னால் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

கோத்தா கோ கம தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவுபெறுவதை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்பு​கை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் பொலிஸ் தலைமையகத்தில் இருந்து காலிமுகத்திடல் கோத்தா கோ கம போராட்டக்களத்தை நோக்கிச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *