யாழில் சைக்கிளை திருடிச்சென்ற பதின்ம வயது சிறுவர்கள்!

பெண் ஒருவரின் துவிச்சக்கரவண்டி கடை ஒன்றின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பதின்ம வயது சிறுவர்களால் களவாடப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது யாழ்ப்பாண நகரின் கோவில் வீதியில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டுகொண்டிருந்த சிறுவர்களின் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

ஆசிரியையாகக் கடமையாற்றும் சைக்கிளின் உரிமையாளரான பெண்மணி, இது குறித்த சிசிடிவி காணொளியை சமூக வலைத்தளமொன்றில் வெளியிட்டுள்ளார்.

அந்தேவேளை நாட்டில் துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் சுமார் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் விலை வரை தற்போது அதிகரித்து விற்பனை செய்யப்படும் நிலையில் இவ்வாறான திருட்டுகளால் போக்குவரத்துக்கு என்ன செய்வது என்ற அங்கலாய்ப்பில் குறித்த பெண் விசனம் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *