லண்டன் பெண் வவுனியாவில் சடலமாக மீட்பு

வவுனியா, ஜூன் 11: வவுனியாவில் கிணற்றில் இருந்து குடும்ப பெண்ணின் சடலம் ஒன்று வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண், கணவரும், இரு பிள்ளைகளும் லண்டனில் வசித்து வரும் நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து வருகை தந்து வவுனியா, தோணிக்கல், ஆலடி வீதியில் வசித்து வந்த நிலையிலேயே அவரது சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்த குறித்த பெண்ணை காணவில்லை என உறவினர்கள் தேடிய போது கிணற்றில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *