மட்டக்களப்பில் வேட்டை – அரிசி பதுக்கல் சிக்கியது!

மட்டக்களப்பில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் நேற்று (10) திகதி மேற்கொள்ளப்பட்ட பதுக்கல் தொடர்பான புலனாய்வு நடவடிக்கையின் போது மட்டக்களப்பில் அரிசியினை பதுக்கிவைத்திருந்த வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஆர்.அன்வர் சதாத் தெரிவித்துள்ளார்.

பொது மக்கள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கிவரும் இச்சூழலில்
மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் அரிசி மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை மாவட்டத்தில் பதுக்கி வைத்திருப்பதாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையானது, மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கே.கருணாகரன் வழிகாட்டுதலிற்கு அமைவாக நேற்றைய தினம் காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய பிரதேசங்களில் பதுக்கல் தொடர்பான புலனாய்வு நடவடிக்கையை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் காத்தான்குடி பிரதேசத்தில் இரண்டு வியாபார நிலையங்கள் உற்பட வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3500 அரிசி மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இனங்கானப்பட்ட அரிசி மூடைகளை உரிமையாளர்களின் விருப்பத்தின் பெயரில் பொதுமக்களுக்காக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு சோற்று அரசியினை 220 ரூபாவிற்கும், சம்பா அரிசியினை 230 ரூபாவிற்கும், கிரி சம்பா அரிசியினை 260 ரூபாவிற்கும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களின் மேற்பார்வையில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு களுவாஞ்சிகுடி சந்தையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது வியாபார நிலையமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,100 இற்கு அன்னளவான அரிசி மூடைகள் கைப்பற்றப்பட்டதுடன், குறித்த அரிசி மூடைகள் அனைத்தும் அரச கட்டுப்பாட்டு விலைக்கு அமைவாக விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொடர்ச்சியாக இவ்வாறாக அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் செய்கின்ற வியாபாரிகளுக்கு எதிராக பாரபட்சம் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரச அதிபரினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைவாக மாவட்டம் முழுவதும் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்வதாகவும் இவ்வாறு பதுக்கலில் ஈடுபடுகின்ற வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நவடிக்கை எடுப்பதாகவும் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஆர்.அன்வர் சதாத் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

ஐ.நா உலக உணவுத் திட்டத்தின் தலைவர் இலங்கைக்கு விஜயம்!

கொவிட் விதிமுறைகளை  தளர்த்தும் அமெரிக்கா!

உலக தொற்று நோயாக குரங்கு அம்மை மாறும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *