40 ஆயிரம் ஹெக்டெயர் நிலப்பரப்பு வனப்பகுதியாக மாறுகிறது

இதுவரை வனப்பகுதிகளாக அறிவிக்கப்படாத 40 ஆயிரம் ஹெக்டயார் நிலப்பரப்பை வனப்பகுதியாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பாறை திருக்கோவில் பகுதியில் இடம்பெற்ற வேலைத்திட்டம் ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 5 ஆயிரம் ஏக்கர் சதுப்பு நிலம் இன்னும் வனப்பகுதியாக பிரகடனப்படுத்தப்படவில்லை.

நாட்டின் கடற்பரப்புகளை அண்மித்த பகுதிகளில் 12 ஆயிரம் ஹெக்டயார் சதுப்புநிலம் காணப்படுகின்றது.

அதில் 80 சதவீதமானவை அழிவடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிப்பதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *