45 எம்.பிக்கள் படுகொலை! திடுக்கிடும் தகவலை அம்பலமாக்கினார் டலஸ்

இலங்கையில் கடந்த 66 வருடங்களில் 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

1956 முதல் 2022 வரையான காலப்பகுதியிலேயே இக்கொலைகள் இடம்பெற்றுள்ளன என்று நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர் தகவல் வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பிரதமராக இருந்த எஸ்.டப்ளியூ. ஆர்.டி பண்டாரநாயக்கவின் கொலையே முதலாவது படுகொலையாகும். இறுதியாக அமரகீர்த்தி அத்துகோரல கொலை செய்யப்பட்டார்.

ஜனாதிபதி பதவியை வகித்த ஒருவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த ஒருவரும் எமது நாட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.

அதாவது 19 மாதங்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இக்கொலைகள் இடம்பெற்றுள்ளன” – என்றார்.

பிற செய்திகள்

இசைச்சாரல் – 3 குரலிசை போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்று நிகழ்வு

சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர்களை நாடுகடத்த முயற்சி

ஸ்கொட்லாந்தில் களமிறக்கப்பட்ட எலிப் படைகள்

கொவிட் விதிமுறைகளை  தளர்த்தும் அமெரிக்கா!

உலக தொற்று நோயாக குரங்கு அம்மை மாறும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *