
இரத்தினபுரி,ஜுன் 11
இரத்தினபுரி, ஹகமுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொன்றதுடன், 11 வயது பிள்ளையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
சம்பவத்தில் 47 வயதுடைய பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த நபரும் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், சந்தேகநபர் தனது 11 வயது பிள்ளையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்த போது, வீட்டில் இருந்த 13 வயதுடைய மற்றுமொரு சிறுமி கத்தி கூச்சலிட்டதை தொடர்ந்து சந்தேகநபரான தந்தை கொலை முயற்சியை கைவிட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த தந்தையும், பிள்ளையும் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.