
அனுராதபுரம்,ஜீன் 12
பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு 09 விசேட ரயில் சேவையில் ஈடுபடுத்த ரயில் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (12) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இந்த ரயில் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
இன்று அதிகாலை 12.40 மற்றும் இரவு 9.00 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரத்திற்கு இரண்டு விசேட ரயில் சேவையில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
13 ஆம் திகதி அதிகாலை 3.30, மதியம் 12.40, மாலை 04.40, மாலை 06.00 மற்றும் இரவு 09 மணிக்கு அனுராதபுரத்துக்கு விசேட ரயில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காலப்பகுதியில் பயணிகளின் வருகைக்கு ஏற்ப அனுராதபுரத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.