பொசன் பௌர்ணமியை முன்னிட்டு 173 கைதிகள் விடுதலை

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 14ஆம் திகதி 173 சிறைக் கைதிகளை விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதன்படி, தண்டனை இரத்து ஊடாக 141 கைதிகளையும், 14 நாட்கள் தண்டனை காலம் குறைப்பின் ஊடாக 32 கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 23 கைதிகளும் குருவிட்ட, மஹர, நீர்கொழும்பு, வீரவில, வாரியபொல, போகம்பர, அனுராதபுரம், களுத்துறை, கொழும்பு மகசின் சிறைச்சாலை, தல்தெனை, வட்டரெக்க, பதுளை, மாத்தறை, அங்குணகொலபெலஸ்ஸ ஆகிய சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.

அத்தோடு பொலனறுவை, கேகாலை, மட்டக்களப்பு, மொனராகலை, பல்லன்சேன, வவுனியா, யாழ்ப்பாணம், காலி, பல்லேகலை மற்றும் திருகோணமலை ஆகிய சிறைச்சாலைகளில் இருந்தும் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *