புனித யாத்திரை சென்றோர் விபத்து! மூவர் பலி

தம்புத்தேகம மற்றும் பாதுக்க பிரதேசத்தில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.

தம்புத்தேகம லுனுவௌயில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அஹுங்கல்ல பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவொன்று அனுராதபுரத்திற்கு புனித யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 19 வயது மற்றும் 27 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பாதுக்க, உடுகம்கந்த பிரதேசத்தில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 54 வயதுடைய பாதுக்க, போபே பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *