CTB பஸ்ஸில் டீசல் திருட முயன்றவர் மடக்கி பிடிப்பு

பசறையிலிருந்து மாத்தறைக்கு செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் டீசல் திருட முற்பட்ட நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டள்ளார்.

பசறை பஸ் நிலையத்தில் இன்று காலை 6.30 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் கைதான நபர் அப்பகுதியில் உள்ள தனியார் பஸ் ஒன்றில் நடத்துனராக கடமை புரிபவர் என தெரியவருகிறது.

இவர் டீசல் திருட முற்பட்ட வேளையில் பஸ் தரிப்பிடத்தின் பாதுகாவலரால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்றைய தினம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *