பாவனையாளர் அதிகார சபையால் யாழில் வியாபார நிலையங்களில் சோதனை நடவடிக்கைகள்!

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பிரதேசங்களில் உள்ள 30 க்கும் மேற்பட்ட வியாபார நிலையங்களில் யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அதிகார சபையால் விசேட சோதனை நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது அரிசியைக் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த 5 விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் நூடில்ஸ் மற்றும் பிஸ்கட் வகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்த இரு விற்பனை நிலையங்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடர்பான அறிக்கை பாவனையாளர் அதிகார சபை உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

மேலும், தொடர்ச்சியாக வியாபார நிலையங்களில் பரிசோதனை, கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைபெறும் என்றும் மாவட்டச் செயலர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *