
கொழும்பு,ஜுன் 12
நாடளாவிய ரீதியில் விவசாயம் செய்யப்படாத அல்லது கைவிடப்பட்ட விவசாய காணிகளை உணவுப் பயிர்ச் செய்கைக்காக 5 வருட காலத்திற்கு அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார்.