அவுஸ்திரேலியா கடல் பயணம் – கைப்பற்றப்பட்ட படகு வாழைச்சேனைக்கு கொண்டுவரப்பட்டது! (படங்கள்)

நீர்கொழும்பில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக சென்ற இயந்திர படகு கைது செய்யப்பட்டு வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (12.06.2022) மாலை கொண்டு வரப்பட்டுள்ளது.

நீர்கொழும்பில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக பயணித்துக் கொண்டிருந்த இயந்திர படகை கடற்படையினர் சுற்றிவளைத்து இடைமறித்து சோதனையிட்ட போது சென்ற 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தென்கிழக்கு கடலில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடற்படையினரால் கைது செயயப்பட்டுள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கடற்படையினரின் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்கள் அம்பாறை பாணமை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கடலில் இருந்து இயந்திர படகை வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு செல்லும் வழியில் இயந்திர கோளாறு ஏற்பட்ட நிலையில், வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திலுள்ள இயந்திர படகு மூலம் கட்டி இழுத்து கொண்டு வரப்பட்டுள்ளது.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *