வெள்ளை மாளிகை பாணியிலான வாராந்த பத்திரிகையாளர் சந்திப்புகளைத் தொடங்கவுள்ள ஜனாதிபதி அலுவலகம்

வாரந்தோறும் பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துவதற்காக ஜனாதிபதி அலுவலகம் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ஊடக மையத்தை நிறுவியுள்ளது.

ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க, அமெரிக்காவில் வெள்ளை மாளிகை நடத்தும் வாராந்த பத்திரிகையாளர் சந்திப்புகளின் அடிப்படையில் புதிய ஊடக மையம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

இது ஊடகவியலாளர்கள், ஜனாதிபதி உட்பட அரச அதிகாரிகளுடன் நேரடியாகவோ அல்லது இணைய வழியில் தொடர்பு கொள்ள வாய்ப்பளிக்கும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *