பசில் ராஜபக்ஷவை சிறையில் அடைக்க வேண்டும் – அத்துரலியே ரத்தன தேரர்

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டுக்கு இழைத்த குற்றத்திற்காக அவரை சிறையில் அடைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “பசில் இன்று வீட்டுக்குச் சென்றுவிட்டார். அவருக்கு இப்போது எந்தப் பொறுப்பும் இல்லை.

குடும்ப அரசியலை வழிநடத்தியவர் தற்போது வீட்டுக்கு திரும்பியுள்ளார். அவரால் நாட்டு மக்கள் அப்படியொரு கதியை அனுபவித்தபோது, ஒரு மனிதன் வேறு நாட்டிற்குச் செல்ல முடியுமா? செய்த குற்றத்திற்காக முன்னாள் நிதியமைச்சர் சிறைக்கு செல்ல வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *