இந்திய யூரியாவை நாற்றுகளுக்கு உரமிட்டால் வேர்கள் அழுகும் அபாயம்!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 55 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 65,000 மெற்றிக் தொன் யூரியா தரமற்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உரங்கள் உள்ளூர் தரத்திற்கு இணங்கவில்லை என்றும், நாட்டில் விவசாயத்துக்கு ஏற்றதல்ல என்றும் அவர் கூறுகிறார்.

எவ்வாறாயினும், இணக்கமற்ற உரக் கலவை குறித்த பிரச்சினைக்கு விசேட அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாற்றுகளுக்கு உரமிட்டால் வேர்கள் அழுகி விடும் என விவசாய வல்லுநர்கள் கூறியதாகவும் அவர் கூறினார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *