உலகில் மிக நீண்ட காலம் அரச பதவியை வகித்த இரண்டாமவர்: பிரித்தானிய ராணி சாதனை!

உலகில் மிக நீண்ட காலம் அரச பதவியை வகித்த இரண்டாமவர் என்ற பெருமையை பிரித்தானிய ராணி எலிசபெத் பெற்றுள்ளார்.

96 வயதான பிரித்தானிய ராணி எலிசபெத், பிரான்ஸில் கடந்த 1643 முதல் 1715ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த 14ஆம் லூயிஸுக்கு அடுத்தபடியாக, அதிக காலத்துக்கு அரச பதவியை வகிப்பவராகியுள்ளார்.

இதேவேளை கடந்த 1927 முதல் 2016ஆம் ஆண்டு வரை (70 ஆண்டுகள் 126 நாள்கள்) ஆட்சி செய்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜை பின்னுக்குத் தள்ளிவிட்டு, இரண்டாவது இடத்தை ராணி எலிசபெத் பெற்றுள்ளார்.

கடந்த 1953ஆம் ஆண்டு மகுடம் சூட்டிய ராணி எலிசபெத், பிரித்தானியாவின் மிக நீண்டகால முடியாட்சியாளர் என்ற பெருமையை கடந்த 2015ஆம் ஆண்டு பெற்றார்.

இதற்கிடையில், ராணி எலிசபெத் அரியணையில் அமர்ந்து 70 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் விழாக்களுக்காக ஜூன் தொடக்கத்தில் பிரித்தானியாவில் நீண்ட வங்கி விடுமுறை இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *