ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படவுள்ளோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது!

பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் திட்டத்துக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அவ்வாறு செல்லவுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை ஒற்றைப் புள்ளிகளாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உட்துறை அலுவலக விமானத்தை நாளை (செவ்வாய்கிழமை) புறப்பட அனுமதிப்பது குறித்து மேல்முறையீட்டு நீதிமன்றம் பின்னர் முடிவு செய்ய உள்ளது.

கடந்த வாரம் பிரச்சாரகர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர், உயர் நீதிமன்றத்தில் அரசாங்கக் கொள்கைக்கு எதிரான தடை உத்தரவை வெல்லத் தவறிவிட்டனர்.

ஆனால், ருவாண்டாவின் தலைநகரான கிகாலிக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்நோக்கும் எண்ணிக்கை 10 பேருக்கு கீழ் குறைந்துள்ளதாக கருதப்படுகிறது.

கிழக்கு ஆபிரிக்க நாட்டிற்கு பறக்க திட்டமிடப்பட்ட அசல் 37 பேரில், நவீன அடிமைத்தனம் மற்றும் மனித உரிமை கோரிக்கைகள் தொடர்பான சட்டரீதியான சவால்கள், அந்த எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துள்ளதாக உட்துறை அலுவலக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *