சீனாவை களற்றி விட்டு இந்தியாவுடன் கைகோர்த்த ரணில்!

கடந்த காலங்களில் எமக்கு ஆதரவளித்த சீனா நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் மௌனம் காத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கி செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியில் சீனாவை விட இந்தியா உதவியதாகவும் சீனா கடந்த காலங்களில் எமக்கு ஆதரவளித்துள்ளது. நெருக்கடியான சில மாதங்களாக அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.

கடந்த சந்தர்ப்பங்களில் அவர்களுடன் அரசாங்கம் எந்தளவுக்கு பேச்சுவார்த்தை நடத்தியது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் சீனாவுடன் பேச்சுவார்த்தையை தொடங்க விரும்புகிறேன்.

ஆனால் பெரிய தயாரிப்பாக இருக்க முடியவில்லை. ஏனென்றால் நாங்கள் இந்தியாவில் அதிக கவனம் செலுத்தினோம் எனவும் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *