பல ஆயிரம் கோடிகளை தாண்டி விறுவிறுப்பாக செல்லும் ஐ.பி.எல் ஏலம்

இந்தியா,ஜுன் 13

இந்தியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தொகை 44 ஆயிரம் கோடி இந்திய ரூபாவைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரையான 5 ஆண்டுகளுக்கான ஏல விற்பனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே சர்வதேச ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

இதற்கமைய 4 பிரிவுகளாக ஏல விற்பனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், A மற்றும் B ஆகிய பிரிவுகளில் போட்டியொன்றுக்கு 107 தசம் 5 கோடி ரூபா ஏலத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், A மற்றும் B ஆகிய பிரிவுகளில் IPL தொடரின் 5 வருட ஒளிபரப்பு உரிமைக்காக 44 ஆயிரத்து 75 கோடி இந்திய ரூபா வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையைப் பெறவுள்ள நிறுவனங்களின் பெயர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *