உலகின் மருந்தகமாக இந்தியா மாறியுள்ளது – சவுமியா சுவாமிநாதன்

உலகின் மருந்தகமாக இந்தியா மாறி வருவது கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா செய்த சாதனைகளில் மிகப் பெரியது என உலக நல்வாழ்வு அமைப்பின் தலைமை அறிவியலாளர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்க அவர் வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரிவித்த அவர், போலியோ ஒழிப்பு, பேறுகாலத்தினத்போது தாய்,சேய் இறப்பு விகிதத்தைக் குறைத்தது உட்பட நலவாழ்வுத்துறையில் இந்தியா செய்துள்ள சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளார்.

அடிப்படை நலவாழ்வுச் சேவைகள் வழங்குவதில் இந்தியா உள்ளிட்ட ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா பெருந்தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமிருப்பதற்கும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கும், ஊட்டச்சத்துப் பற்றாக்குறை மிகப்பெரிய காரணம் எனவும் யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *