அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இன்று (04) நாடு திரும்பினார்.
அவர் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காகவே அவர் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார்.