அரச ஊழியர்கள் தடையின்றி வெளிநாடு செல்ல அமைச்சரவை அனுமதி!

அரச ஊழியர்கள் தடையின்றி வெளிநாடு செல்வதற்கு ஏதுவாக தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது படிப்பு அல்லது வேலை வாய்ப்புக்காக சேவையாற்றும் அரசு ஊழியர்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் தங்கள் பதவிக்காலத்தில் வெளிநாடு செல்ல முடியும்.

இத்திருத்தத்தின் கீழ், தற்போதுள்ள விதிகள் திருத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட ஊழியரின் ஓய்வூதியக் கணக்கீடு உள்ளிட்டவற்றை பாதிக்கும் விதிகள் தளர்த்தப்படும்.

அத்தகைய திருத்தப்பட்ட விதிகள் அடங்கிய சுற்றறிக்கையை விரைவாக வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *