பல மாதங்களின் பின் லாப் எரிவாயு விநியோகம்; நீண்ட வரிசையில் மக்கள்!

நாடு பூராகவும் கடந்த சில மாதங்களாக தட்டுப்பாடாக இருக்கின்ற லாப் எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் நுவரெலியா மக்களுக்கு இன்று வழங்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில் 4 மணியில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இரு மாதங்களுக்கு மேலாக லாப்கேஸ் வழங்கப்படாத நிலையில் நுவரெலியா மின்சார சபை கட்டடத்திற்கு முன்பாக இன்று விநியோகம் இடம்பெறுகிறது.

லாப் கேஸ் விநியோக மொத்த விற்பனை முகவர்களால் எடுத்து வரப்பட்டு, சுமார் 1,150 சிலிண்டர்கள் கடும் நெருக்கடிக்கு மத்தியில் நுவரெலியா, பொரலாந்த, கந்தபளை, மாகஸ்தோட்டம், நானுஒயா உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வருகை தந்த பொது மக்களுக்கு பொலிஸாரின் மேற்பார்வையில் வழங்கப்படுகிறது.

எனினும் அனைத்து வாடிக்கையாளர்களினதும் தேவைக்கு ஏற்ப சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியவில்லை.

இதன்போது, நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தொழில் புரிவோருக்கு வழங்கப்பட்டமையால் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

தொடர்ந்து எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *