சிறப்பாக நடைபெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வு

முல்லைத்தீவு,ஜுன் 14

உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதம் நிறைந்த வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விவசாக பொங்கல் நிகழ்வு நேற்று காலை ஆரம்பித்து இன்று அதிகாலை வரை பாரம்பரிய முறைப்படை சிறப்புற நடைபெற்றது.

பொங்கல் நிகழ்விற்காக கடந்த 6 ஆம் திகதி முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் இருந்து சென்று முல்லைத்தீவு தீர்த்தக்கரை கடலில் கடல்நீரீல் தீர்த்தம் எடுக்கப்பட்டது.

கடந்த ஏழு நாட்களாக முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் அம்மன் சன்னிதியில் அணையா விளக்காக எரிந்து காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வும் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று திங்கட் கிழமை அதிகாலை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அணையாக விளக்கு எடுத்துவரப்பட்டு பொங்கல் நிழக்வுகள் ஆரம்பமாகின.

ஆதிகாலை 12.00 மணிக்கு பொங்கல் நிழக்வுக்கான ஏற்பாடுகளாக மடைப்பண்டம் எடுத்துவரப்பட்டு வளந்து நேர்ந்து பொங்கல் பானை தயார் செய்யப்பட்டு பூசாரியால் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு பொங்கல் பானை வைக்கப்பட்டு பொங்கப்பட்டது.
கண்ணகி அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டு சிறப்பு பூசை வழிபாடுகள் அதிகாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து குளிர்வித்தல், தடைவெட்டுதல் எனப்படும் சடக்குகளுடன் பொங்கல் விழா சிறப்பாக நிறைவு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *