ஜப்பானின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி-பிரதமர் வாழ்த்து

ஜப்பானின் புதிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு ( Fumio Kishida) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனார்.

ஜப்பானுடன் ஒரு வலுவான உறவை வளர்க்க இலங்கை விரும்புகிறது என தனது வாழ்த்துரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது வாழ்த்துரையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஒன்றாக வேலை செய்ய எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *