“ரிஷாட்டை மஹிந்த காப்பாற்றுவார்” – தேரர் பகீர்

எமது நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் அரசியல் தலைவர்கள், பணபலம் படைத்த செல்வந்தர்களின் வீடுகளில் பணியாற்றும் அப்பாவி சிறுவர்கள் துன்புறுதலுக்கு உள்ளாகி உயிரிழந்தபின் அந்த விடயம் மறைக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்படாமல் சட்டத்தில் இருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்வதையே இந்த சிறுமியின் மரணத்தில் எமக்கு காணக்கூடியதாக இருக்கின்றது என தேவால்ஹிந்த அஜித தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு சட்டம் இயற்ற வந்த மனிதர்கள், 12 நாட்கள் முடியும் வரை இருந்து அந்த சிறுமிக்கு தீவைத்து, வைத்தியசாலையில் அனுமதித்து, வாக்குமூலம் எதனையும் பெறாமல், இருந்த நிலையில் மக்கள் இது தொடர்பாக பேச ஆரம்பித்து, ஆர்ப்பாட்டங்களை செய்ய ஆரம்பித்ததன் பின்னரே சட்டம் செயற்பட ஆரம்பிக்கின்றது.

ஒரு நாடு, ஒரு சட்டம், தேசிய பாதுகாப்பு இவற்றை வைத்து தான் இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தான் வந்தார்கள். ஆனால் இன்று நம் நாட்டில் பிறந்த அப்பாவி ஏழை சிறுவர்கள் கஷ்டத்திற்காக அரசியல்வாதிகளின் வீடுகளில் வீடு வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *