நாட்டில் மேலும் 43 பேர் உயிரிழப்பு! – 572 பேருக்குத் தொற்று உறுதி

நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மேலும் 43 பேர் உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்; உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்று உயிரிழந்ததாக தெரியவருகின்றது.

மேலும், 572 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 521,004 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,102 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 18,076 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 477,374 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *