அரசியல் ஆட்டத்தால் ஆபத்தில் ’21’ திருத்தம்! சஜித் சுட்டிக்காட்டு

நாட்டில் அரசியல் ஆட்டத்தால் அரசமைப்பின் 21 ஆவது திருத்தம் ஆபத்தில் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று தெரிவித்தார்.

மறுசீரமைப்புக்கான தேசிய இயக்கத்தின் பிரதிநிதிகள் குழுவினருடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (15) நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீதி அமைச்சரின் 21 ஆவது திருத்தம், அரசின் 21 ஆவது திருத்தம், எதிர்க்கட்சியின் 21 ஆவது திருத்தம் என எதுவும் இல்லை எனவும், ரஞ்சித் மத்தும பண்டாரவால் தனி நபர் பிரேரணையாகக் கொண்டுவரப்பட்ட 21 ஆவது திருத்தம் மாத்திரமே தற்போதுள்ள ஒரே ஒரு திருத்தம் எனவும் அவர் கூறினார்.

உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் எனக் குறிப்பிட்ட அவர், நாடாளுமன்றத்தின் மூன்றாவது வாரத்தில் அது குறித்து விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்நாட்டில் சீர்திருத்தங்களை விட அரசியல் விளையாட்டுகளால் மூழ்கியிருப்பதால் இது பற்றி விவதாதிக்கப்படாத இரண்டாம் பட்ச கவனிப்பே இருக்கின்றது எனக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய அரசியல் நெருக்கடிக்கான தீர்வு புதிய மக்கள் ஆணையிலையே தங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இந்த நெருக்கடிக்கு சில மாதங்களில் தீர்வு உண்டு சில வீரர்கள் பெருமை பேசினாலும் கூட, உண்மையான நிலைப்பாடு அவ்வாறு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

புதிய சீர்திருத்தச் செயற்பாடுகளுக்கு சகல தரப்புகளினதும் யோசனைகள் இன்றியமையாதது எனவும் அவர் மேலும் கூறினார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *