கல்முனை கடற்கரை சூழலில் முன்னெடுக்கப்பட்ட சிரமதானப்பணி

கல்முனை கடற்கரை சூழலில் முன்னெடுக்கப்பட்ட சிரமதானப்பணி

கல்முனை கடற்கரை சூழலில் மாநகர சபை உறுப்பினர் என்ற கென்றி மகேந்திரனின் ஏற்பாட்டில் கல்முனை 3 கோயில் வீதி தொடக்கம் கல்முனை பாண்டிருப்பு தாழவெட்டுவான் எல்லை வீதி வரை உள்ள 2 km கடற்கரை அதனை அண்டிய பிரதேசங்களில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை மாநகரசபை, கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஆகியவற்றின் இயந்திரங்கள், ஊழியர்கள் , சமுத்தி பயனாளிகள் ஆகிய வளங்கள் பங்கெடுத்தன.

கடந்த சனிக்கிழமை இந்த சிரமதான பணியை திறன்பட செய்து முடிக்க சகல விதத்திலும் உதவிகள், ஒத்தாசை வழங்கிய கல்முனை வடக்கு பிரதேச செயலக செயலாளர் ரி. ஜே.அதிசயராஜ், சமுத்தி முகாமையாளர் இதயராஜா, கிராம உத்தியோகத்தர், அருள்ராஜா, சமுத்தி அதிகாரிகள், சமுத்தி பயனாளிகள், கல்முனை மாநகரசபை முதல்வர், ஆணையாளர், சுகாதார பிரிவு அதிகாரிகள், மாநகர சபை உறுப்பினர் செலஸ்றினா , ஊழியர்கள் ஆகியோருக்கு இவ்வேலை திட்டத்தை சிறப்பாக செய்து முடிப்பதற்கு உதவியமைக்காக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் நன்றிகளைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *