இலங்கை தமிழ் குடும்பத்தினை சந்தித்தார் அவுஸ்ரேலியப் பிரதமர்

நான்கு வருடங்களுக்கும் மேலாக குடியேற்ற தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மத்திய குயின்ஸ்லாந்திற்கு கடந்த வாரம் திரும்பிய இலங்கை தமிழ் குடும்பத்தினை அவுஸ்ரேலியப் பிரதமர் அன்டனி அல்பெனிஸ் சந்தித்துள்ளார்.

குயின்ஸ்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் இவர்களை சந்தித்து பேசியுள்ளார்.

இதன்போது நடேசலிங்கம் குடும்பத்தினர் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அவர்களிற்கு நிரந்தர வதிவிடம் விரைவில் கிடைக்கும் என பிரதமர் உறுதியளித்திருந்தார் என நடேசலிங்கம் குடும்பத்தின் நண்பரான அஞ்செலா பிரெட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

தீர்வு வந்து கொண்டிருக்கின்றது என பிரதமர் உறுதியளித்தார் எனவும் அஞ்செலா பிரெட்ரிக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *