அயர்லாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான ரி-20 தொடர்: இந்திய அணி விபரம் அறிவிப்பு!

அயர்லாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான ரி-20 தொடரில் விளையாடும், 17பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் அயர்லாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டப்ளின் நகரில் ஜூன் 26ஆம் மற்றும் 28ஆம் ஆகிய திகதிகளில் இரண்டு ரி-20 போட்டிகளில் விளையாடுகின்றது.

இந்தநிலையில், இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 17பேர் கொண்ட இந்திய அணியின் தலைவராக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் துணை தலைவராக செயற்படுவார். காயத்திலிருந்து மீண்ட சூர்யகுமார் யாதவ் அணிக்கு திரும்பியுள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடிய வலதுகை துடுப்பாட்ட வீரர் ராகுல் திரிபாதி, சர்வதேச போட்டியில் அறிமுகமாகிறார்.

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான அணியில், புவனேஷ்வர் குமார், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் அய்யர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *