தேங்காய் பறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

நீர்கொழும்பு, கொச்சிக்கடை – ஏத்கால – கேரம் தோட்டப் பகுதியில் அனுமதியின்றி தேங்காய் பறித்த நபரொருவர் மீது காணி உரிமையாளர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதில், குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட குறித்த சந்தேகநபர் துப்பாக்கியுடன் கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து, கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *