சர்வதேச வீட்டு தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஹட்டனில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
புரொடெக்ட் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த ஆர்ப்பாட்ட பேரணி ஹட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பமானது. 300ற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றிருந்தனர். பின்னர் ஹட்டன் தொழில் திணைக்களத்திற்கு பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கு தொழில் ஆணையாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
வீட்டுப்பணியும் ஒரு தொழில் தான். எனவே வீட்டுப் பணியாளரையும் தொழிலாளியாக கருது என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டதோடு, பதாதைகளும் ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வீட்டு உரிமையாளர்களின் தொழில் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம், நம்பிக்கை நிதியம் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுப்பட்டவர்கள் வலியுறுத்தினர்.
அதேவேளை, நாட்டில் பொருட்களின் விலைகள் தொடச்சியாக அதிகரிக்கப்பட்டு வருவதால் தொழிலாளர்களுக்குரிய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றது.
எனவே மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். வரிசை யுகத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும் எனவும் போராட்டத்தின் போது வலியுறுத்தியமை குறிப்பிடதக்கது.






பிற செய்திகள்
- முச்சக்கர வண்டி சாரதியின் நடனம்; எரிபொருள் வரிசையில் சுவாரஸ்ய சம்பவம்! (வீடியோ இணைப்பு)
- பொதியொன்றிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிப்பு; நீர்கொழும்பில் பதட்டம்!
- யாழ் – கொழும்பு விசேட புகையிரத சேவை நாளை ஆரம்பம்!
- குடிநீர் திட்டங்களை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்க திட்டம்!
- 80 வீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு!