யாழ்.பல்கலைக்கழக மாணவி மீது அசிட் வீசப்போவதாக அச்சுறுத்திய நபர்..!

யாழ்.பல்கலைகழகத்தின் முன் நின்றவாறு பல்கலைகழக மாணவி மீது அசிட் வீசப்போவதாக நபர் ஒருவர் அச்சுறுத்தியுள்ளார்.

இச்சம்பவமானது இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்து.

புகுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில் குறித்த நிகழ்வுக்காக வந்திருந்த மாணவி ஒருவரை வழிமறித்த NP VP 4490 என்ற இலக்கத்தை உடைய மோட்டார் சைக்கிளில் வந்திருந்த நபர் அசிட் வீசப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.

குறித்த சம்பவத்தை அவ்வழியாக வந்த பல்கலைக்கழக மாணவர்கள் மாணவியை பல்கலைக்கழகத்திற்குள் அனுப்பிவிட்டு சம்மந்தப்பட்ட இளைஞனை விசாரித்துள்ளனர்.

இதன்போது அவர் உரும்பிராய் பகுதியை சேர்ந்தவர் எனவும் அவருடைய கையில் இருந்தது அசிட் போத்தல் அல்ல அது வெறும் தண்ணீர் என்பதும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திய மாணவர்கள் குறித்த நபரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *